×

மாணவியை கடத்தி திருமணம்

கோவை, பிப்.26: கோவை கமிஷனர் அலுவலகத்தில் ஒண்டிப்புதூரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-எனது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரித்தனர். அதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பர்ஷித் என்பவர் வீட்டில் எனது மகள் இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து போலீசாருடன் அங்கு சென்று எனது மகளை மீட்டு கோவை அழைத்து வந்தோம். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் எனது மகள் மாயமாகி விட்டார். இது குறித்து பர்ஷித் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது எனது மகளுக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டதாக தெரிவித்தனர். 17 வயதே ஆன எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்