ஈரோடு, பிப். 26: ஈரோடு அருகே 60 வேலம்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் 750 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. இதற்கான பணியினை எஸ்பி. சக்திகணேசன் துவங்கி வைத்தார். ஈரோடு அருகே 60 வேலம்பாளையத்தில் காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் தளம் அமைந்துள்ளது. இந்த துப்பாக்கி சுடும் தளத்தில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள், ஒளிரும் ஈரோடு சார்பில் பசுமை வனம் உருவாக்கும் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி. சக்திகணேசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் சக்திகணேஷ், இளங்கவி, ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி, குமார், ராபின், சீனிவாசன், அறம்செய் பவுண்டேசன் தவைலர் அருள்சேகர், பசுமை அமைப்பாளர் அரவிந்த், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த துப்பாக்கி சுடும் தளத்தில் அரசு, வேம்பு, புளியன், கோணபுளியன், இளந்தை, அத்தி, புங்க மரக்கன்றுகள் என 750 மரக்கன்றுகள் நடப்பட்டன.