×

மேலகரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

நெல்லை, பிப். 26:  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தென்காசி: தென்காசி அடுத்துள்ள மேலகரத்தில் பேரூர் அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளையொட்டி குடியிருப்பு வீரபாண்டி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாடர்ந்து மேலகரம், நன்னகரம் பகுதியில் அதிமுக கொடியேற்றி அலங்கரிக்கப்பட்ட ஜெ. படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளும், பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அதிமுக பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக் குமார் தலைமை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் நெல்லை முகிலன் முன்னிலை வகித்தார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதில் மாவட்ட பிரதிநிதி நாராயணன், வழக்கறிஞர் செல்லத்துரை பாண்டியன், வார்டு செயலாளர்கள் அருணாசலம், வெங்கடகிருஷ்ணன், பழனி, சுப்பிரமணியன், செந்தில், சேகர், சார்பு அணி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பழனி, மகாலிங்கம், ராமகிருஷ்ணன், கருப்பசாமி, செல்வராஜ், ராஜா, ராமசாமிபிள்ளை,  கார்த்திக், அண்ணாதுரை, பிரகாஷ், முத்து, ராஜ், இசக்கி, முத்தையா, துரைராஜ், செல்லத்துரை, மூக்கையா, ரவி, சசிகுமார், பரமசிவன், பொன் பெருமாள், கரடி சாமியா, முருகன், முப்பிடாதி, குமார், பீட்டர், குமாரவேல், முருகையா, சரசா, வீரபாண்டியன், ராம்பிரசாத், காளிதாஸ், விஜய், கணேசன், மகேஷ், கார்த்தி, கண்ணன், சக்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  தொடர்ந்து குடியிருப்பு பரூக் நினைவு தொடக்கப்பள்ளியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில் பள்ளியின் நிர்வாகி, அனைத்து ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


Tags : Jayalalithaa Birthday Celebration ,
× RELATED ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி