×

கோட்டூர்புரம் பூங்காவில் தொழிலதிபருக்கு கத்திக்குத்து : இருவருக்கு வலை

சென்னை, பிப். 26: கோட்டூர்புரம் பூங்காவில் அமர்ந்து இருந்த தொழிலதிபரை கத்தியால் குத்திவிட்டு மாயமான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் கடம்பாடி (42). இயற்கை உணவு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோட்டூர்புரம் பூங்காவில் அமர்ந்து இருந்தார். அப்போது 2 பேர் பூங்காவிற்குள் கடம்பாடி மீது மோதுவது போல் பைக் ஓட்டி வந்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் 2 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் கடம்பாடியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த கடம்பாடியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சம்பவம் குறித்து தொழிலதிபர் கடம்பாடி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கா அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Businessman ,Gotturpuram Park ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்