ஜெயங்கொண்டம், பிப்.26: ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு கட்சியினர் 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் இருவண்ண துண்டு அணிவித்து வரவேற்றார்.நிகழ்ச்சியில் நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் .கணேசன், நகர அவைத்தலைவர் குமார், பொருளாளர் காசிநாதன், நகர துணை செயலாளர்கள் ரமேஷ், கொளஞ்சியப்பா, நிர்மலா செல்வம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பஞ்சநாதன், மாவட்ட பிரதிநிதிகள் பஞ்சநாதன், கணேசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாசம், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.