×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை தாசில்தார் அலுவலகம் முன் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப். 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை தாசில்தார் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அலுவலர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். அரசாணை எண் 56ல் இருந்து அவர்களுக்கு விளக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை தாசில்தார் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செந்தில்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் காமராஜ் மற்றும் ராமசாமி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிற்றரசு நன்றி கூறினார்.

Tags : Revenue officers ,office ,Centurion Dasildar ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...