×

28ம் ேததி துவக்கம் குளத்தில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை

புதுக்கோட்ைட, பிப்.26:புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சின்னகேனி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் காளிஸ்வரன் ( 18). இவர் கடந்த 23-ந் தேதி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு சென்று வருவதாகக்கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காளிஸ்வரனை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து காளிஸ்வரனின் தாயார் ராணி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிஸ்வரனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருேக உள்ள பெரியகுளத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்தவர் காளிஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளிஸ்வரன் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்