×

விவசாயிகள் எதிர்பார்ப்பு அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் திமுக கிளை தேர்தல் ஆலோசனை கூட்டம்

அறந்தாங்கி, பிப்.26:அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக கிளைக் கழக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நாகுடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக தேர்தல் ஆணையர் பல்லாவரம் கருணாநிதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஆலங்குடி எம்.எல்.ஏ.மெய்யநாதன், விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் வீரமணி, அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ உதயம்சண்முகம், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பையா, மணமேல்குடி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சீனியார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாங்குடி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நந்தினிகண்ணன், நிர்வாகிகள் ராஜேந்திரன், கணபதி, ஆளப்பிறந்தான் சேகர், பெருங்காடுசிவசுப்பிரமணியன், சின்னையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Branch Election Advisory Meeting ,Faridkot ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்