அறந்தாங்கி, பிப்.26:அறந்தாங்கி பகுதி வௌ்ளாறில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் மணல் எடுக்கப்படும் நிலையில், அரசு பணிகளுக்குக்கு கூட மணல் கிடைக்காததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடப் பணிகள் எம்.சாண்டில் கட்டப்படுவதால், கட்டிடம் உறுதியாக இருக்குமா என்ற கேள்விக்குறியாகி உள்ளது. அறந்தாங்கியில் சுமார்ரூ.2 கோடி மதிப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள், சுமார்ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறந்தாங்கி தாசில்தார்அலுவலகம், சுமார்ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் வருவாய் கோட்டாச்சியர்அலுவலகம், சுமார்ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் ஆவுடையார்கோவில் தாசில்தார்அலுவலகம், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அறந்தாங்கியில் தீயiணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் போன்ற கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார்ரூ.2 கோடி மதிப்பில் அறந்தாங்கியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்அலுவலகம் கட்டும் பணி தொடங்க உள்ளது.
கட்டுமானப்பணிக்கு தேவையான பொருள்களில் மணல் முக்கியமான ஒன்றாகும். அறந்தாங்கி பகுதி வௌ்ளாறில் கிடைக்கும் மணல் அதிக தரத்துடன் கூடிய நம்பர்ஒன் மணலாக விளங்கி வருகிறது. தற்போது அழியாநிலை பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் அள்ளப்பட்டு, கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, மணல் ஆன்லைன் மூலம் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெறுவதால், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மணல் கிடைப்பதில்லை. மாறாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர்உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மணல் கிடைக்கிறது.
இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் நடைபெறும் அரசு கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு தேவையான மணல் கிடைக்காததால், அனைத்து கட்டிடங்களும் எம்.சாண்ட் மூலம் கட்டப்பட்டு வருகிறது. பொறியாளர்களின் கூற்றுப்படி எம்.சாண்ட் மணலைப் போன்றே உள்ளதால் தரமானதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளதால், மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசு எம்.சாண்ட் மூலம் அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.