×

பேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

பேராவூரணி, பிப். 26: பேராவூரணியில் தஞ்சை மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் நடந்த போட்டிக்கு கரூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் ஷிஹான் சரவணன் தலைமை வகித்தார். தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் பாண்டியன் வரவேற்றார். புடோகான் கராத்தே சங்க தலைவர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.கட்டா, குமிட்டே, வெப்பன்கட்டா ஆகிய கராத்தே போட்டி, சிலம்பம், நுன்ஜாக், சுருள் வாள் உள்ளிட்ட போட்டிகளில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு பதக்கம் மற்றும் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.முன்னதாக 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற தற்காப்பு கலை விழிப்புணர்வு பேரணியை சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அம்மையாண்டி ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம், அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி கலந்து கொண்டனர்.

Tags : District level karate competition ,Peravurani ,athletes ,
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்