×

பக்தர்கள் எதிர்பார்ப்பு திருவையாறு அருகே சைக்கிளில் இருந்து விழுந்த கொத்தனார் பரிதாப பலி

திருவையாறு, பிப். 26: திருவையாறு அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார், சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவையாறு அருகே கல்யாணபுரத்தை சேர்ந்த கொத்தனார் சுரேஷ்குமார் (40). இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 20ம் தேதி சுரேஷ்குமார் சைக்கிளில் நடுக்கடை முகமதுபந்தர் அருகே வந்தார். அப்போது நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசில் சுரேஷ்குமார் தம்பி செந்தில்குமார் (37) புகார் செய்தார்.  சப்இன்ஸ்பெக்டர் அப்பர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

'2003ம் ஆண்டு அகற்றம்'
2003ம் ஆண்டு முதல் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை பயணிகளின் எதிர்ப்பால் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மாநகராட்சி ஆணையர், கலெக்டர் ஆகியோரின் அனுமதிக்காக காத்துள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி கிடைத்துடன் இங்கு டாஸ்மாக் கடை செயல்படும் என தெரிகிறது.

Tags : sacrifice ,Devotees ,Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா