×

மேலப்புத்தூர் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்

சாத்தூர், பிப்.26: சாத்தூர் அருகே மேலப்புத்தூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் அருகே மேலப்புத்தூர் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன் முன்னிலையில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கி கூறினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து முதியோர், விதவை உதவிதொகை மனுக்கள், தொகுப்பு வீட்டிற்கான மனுக்களை பெற்றார். அனைவருக்கும் உதவிதொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன் இருந்தனர். கிழக்கு ஒன்றிய இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் வெற்றிச்செல்வம் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக்கனி செய்திருந்தார்.

Tags : Jayalalithaa ,birthday ,village ,Melapputhur ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...