×

சில்வார்பட்டி ஊராட்சியில் வீடு கட்டும் பணியை ஆய்வு

தேவதானப்பட்டி, பிப். 26: தேவதானப்பட்டி அருகே, சில்வார்பட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார். தேவதானப்பட்டி அருகே, சில்வார்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பயனாளிகள் வீடுகள் கட்டி வருகின்றனர். இப்பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலவதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ‘பயனாளிகள் விரைந்து வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பிடிஓக்கள் திருப்பதி முத்து, முத்துப்பாண்டி, பொறியாளர்கள் நாகராஜ், தெய்வலட்சுமி, சில்வார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், ஊராட்சி செயலாளர் பிச்சைமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Silvarpatti Panchayat ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...