×

ராணுவ வீரர் குடும்பத்திடம் குறைகளை கேட்ட டிஐஜி

பேரையூர், பிப்.26: பெரியபூலாம்பட்டி முத்துநாகையாபுரத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்த பிச்சை அழகு மகன் அழகுபாண்டி கடந்த 2017ம் ஏப்.24ம் தேதி வீரமரணம் அடைந்தார். இவரின் குடும்பத்தை காண சென்னை சிஆர்பிஎப் டிஐஜி சோனல்வி மிஸ்ரா தலைமையில், பேரையூர் டி.எஸ்.பி.மதியழகன், இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா அழகுபாண்டி வீட்டிற்கு சென்றனர். டிஐஜி சோனல்வி மிஸ்ரா, ராணுவவீரர் அழகுபாண்டியின் குடும்ப சூழ்நிலையை கேட்டறிந்தார்.இதேபோல் ராணுவத்தில் பணிபுரிந்த பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த லிங்கம் மகன் பெருமாள் கடந்த 2013 மார்ச்1 3ம் தேதி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து டிஐஜி சோனல்வி மிஸ்ரா பேசினார். மேலும் இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற பரந்துரை செய்வதாக டிஐஜி தெரிவித்தார்.

Tags : DIG ,soldier ,
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு