×

சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 6வது நாளாக தர்ணா போராட்டம்

காட்டுமன்னார்கோவில், பிப். 26: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டியில் சிஏஏ, என்பிஆர், மற்றும் என்ஆர்சிக்கு எதிராக அனைத்து கட்சி இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 6வது நாளாக தொடர்ந்தது. தனியார் இடத்தில் காவல்துறையின் அனுமதியின்றி தற்காலிக கூரை அமைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் சிஏஏவிற்கு எதிராக பல்வேறு அமைப்பினர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக நடத்தப்படும் பல்வேறுகட்ட போராட்டங்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தற்போது பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி தனியார் இடத்தில் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது. அமைதி வழியில் தர்ணா நடைபெறுவதால், இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. சிஏஏவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் அமைதியாக நடத்தும் தர்ணா போராட்டம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.




Tags : Dharna fight ,CAA ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்