×

கடலூரில் 28ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

கடலூர், பிப். 26: கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பயோடேட்டா ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் பணியாளர்களின்
தேவை உள்ளிட்ட விவரங்களை மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசியில் தெரிவித்து முன்பதிவு செய்து பணியாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். முகாம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை அரசு வேலைவாய்ப்பு அலுவலக துறை மேற்கொண்டுள்ளது.

Tags : Placement Camp ,Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை