×

நாகர்கோவிலில் பினாயில் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

நாகர்கோவில், பிப்.26 : நாகர்கோவிலில் பினாயில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.  குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.குமரி மாவட்டம் அருமநல்லூரை சேர்ந்தவர் லெட்சுமணன் (37). இவர் பூஜை பொருட்கள் மற்றும் பினாயில் உள்பட ஸ்டேஷனரி பொருட்களை மொத்தமாக ெகாள்முதல் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இதற்கான குடோன், நாகர்கோவில் சற்குண வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு லெட்சுமணன், வீட்டுக்கு சென்றார்.நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த குடோனில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், லெட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு படையினர் சென்றனர். கதவை உடைத்து திறந்த போது, உள்ளே தீ கொளுந்து விட்டு எரிந்தது. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி கிடந்தன. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.   நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் காலையில் தான் இதை கவனித்துள்ளனர். இதில் சுமார் ரூ.7 லட்சம் வரையிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags : Binayil Gudon ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...