×

தஞ்சை மாவட்டத்தை ஆன்மிக மண்டலமாக அறிவிக்க வேண்டும்

கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் அடுத்த உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி என்றழைக்கப்படும் சிவலிங்கத்துக்கு சதய நட்சத்திரத்தை முன்னிட்டு இந்து தமிழர் கட்சி சார்பில் நெற்கதிர்கள் மற்றும் நெல்மணிகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம்ரவிக்குமார் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டும். நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நெற்கதிர்கள் மற்றும் நெல்மணிகளை கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் பரணிதரன், மாவட்ட நிர்வாகி சிவா,ராமமூர்த்தி, ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை நிர்வாகி பாலு உடனிருந்தனர்.

இதைதொடர்ந்து ராமரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களை ஆன்மிக திருக்கோயில் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பாரம்பரிய நெல்லுக்கு ராஜராஜ சோழன் பெயர் வைக்க வேண்டும். கோயில் பணியாளர்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கோயில் அறக்கட்டளை நிலங்கள் மற்றும் இடங்களை மீட்க வேண்டும், அறநிலையத்துறையை கலைத்து விட்டு அறநிலைய வாரியம் அமைக்க வேண்டும். உடையாளூரில் ராஜராஜசோழனுக்கு மணிமண்டபம், கோயில் கட்ட வேண்டும் என்றார்.



Tags : district ,Tanjore ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...