×

இளம்பெண் தற்கொலை

கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பந்தி மாதா கோவிலை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் உறவினர் மகளான ஜெனிபர் (20) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் ஜெனிபருக்கு திருமணம் செய்வதற்காக வறுமையில் இருந்த சிவக்குமார், பலரிடம் பணம் கேட்டு வந்தார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை. இதையறிந்த ஜெனிபர் தனது திருமணத்துக்காக சிவக்குமார் கஷ்டப்படுகிறாரே என மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு ஜெனிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை