×

குறைதீர் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர்,பிப்.25: பெரம்பலூரில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை, கலெ க்டர் சாந்தா தலைமையில், அனைத்துத்துறை அரசு அ லுவலர்களும் ஏற்றுக் கொ ண்டனர்.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் 110விதியின்கீழ் முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (24ம்தேதி) பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களாலும் மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்டஇயக்குநர் தெய் வநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)ராஜராஜன், குழந் தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...