×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை வேதாரண்யத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

வேதாரண்யம், பிப். 25: வேதாரண்யத்தில் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளரும், நாகை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவருமான கிரிதரன், நகர செயலாளர் எழிலரசு, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நாகை மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், அதிமுக பிரமுகர் அன்பழகன், மாரியப்பன், இலக்குவன், முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், வழக்கறிஞர் நமச்சிவாயம், ஓய்வுபெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜரெத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குஞ்சாலி மரைக்காயர், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் பாபு, ஆசிரியர் கருணாநிதி, நகரஅவைத்தலைவர் பழனிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வேதாரண்யம் மேலவீதி ராஜாஜி பூங்கா எதிரிலும், வேதாரண்யம் மேலத்தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலும் மற்றும் ஒன்றிய, நகரத்தில் 200 இடங்களில் ஜெயலலிதா படம் வைத்து ஆங்காங்கு கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். ஆறுகாட்டுத்துறையில் ஜெயலலிதா பிறந்த நாளைமுன்னிட்டு முன்னாள் நகரச் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. வேதாரண்யம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நுழைவு வாயிலில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க தலைவர் வேதமூர்த்தி, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் குமார் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது.

Tags : Jayalalithaa Birthday ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...