×

வேதாரண்யம் கருப்பம்புலத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

வேதாரண்யம். பிப். 25: வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் அரசு அறிவித்த நேரடிநெல் கொள்முதல் நிலையம் புதிதாக திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து தினகரனில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது. இதையொட்டி நேற்று கருப்பம்புலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அரசு அறிவித்து நெல் கொள்முதல் செய்வதற்கு எடை மெஷின், சாக்கு, நெல் தூற்றும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து கொள்முதல் செய்வதற்கு தேவையான பொருட்களும் வந்து சேர்ந்தது. இதனால் நெல் கொள்முதலுக்கு தயாரான நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து அடுக்கி வைத்தனர்.

கடந்த மூன்றுநாட்களாக கொள்முதல் நடைபெறவில்லை. நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நிலையில் விவசாயிகள் கடந்த மூன்று நாட்களாக இரவுபகலாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளோடு காத்து கிடந்தனர். நேற்று நேரடிகொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லை கொள்முதல் செய்ய துவங்கினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் தொழிலதிபர் பிவிகே.பிரபு, விவசாயிகள் மணியன், லெனின், வெங்கடாசலம், நடராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paddy Purchase Station ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்