×

விமான நிலையத்தில் கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை, பிப். 25: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்பி, நேற்று காலை விமானம் மூலம் வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அரசுக்கு வருவாயை பெருக்க வழிதேடாமல் தமிழக அரசு பட்ஜெட் உள்ளது. எதிர்காலத்தை பற்றி திட்டமிடுதல் இல்லாததே கடன் சுமைக்கு காரணம். மாநிலங்களவையில் சிஏஏவிற்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கவில்லை என்றால், இவ்வளவு போராட்டங்கள் நடைபெற தேவை இருக்காது, என்றார்.முன்னதாக விமான நிலையத்தில் கனிமொழி எம்பிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சண்முகையா எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள் என்பி.ஜெகன், சொர்ணக்குமார், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி ஊராட்சி துணை சேர்மன் கோயில்மணி, கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் வெயில்ராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : airport ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்