×

கடையத்தில் பாஜ ஆலோசனை கூட்டம்

கடையம், பிப். 25: குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக கடையத்தில் பாஜ  நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக கடையத்தில் பாஜ  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சுசிலா குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைதலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். கடையம் ஒன்றிய பொதுசெயலாளர் ரத்தினகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி தென்காசியில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடக்க உள்ள பேரணிக்கு ஒன்றியத்திலிருந்து 40 வாகனத்தில் செல்வது, பொட்டல்புதூர் தீபத் திடலில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இதில் ஆழ்வை நகரத் தலைவர் முருகன், மாடசாமி, சரவணன், முருகேசன், சுரேஷ், சிவமணிகண்டன், சித்தார்த், தமிழ்ச்செல்வன், ராஜ், மாரியப்பன், மகளிர் அணி ஒன்றியத் தலைவி சந்திரா, மணிமேகலை, சந்திரமதி, கல்யாணசுந்தரம், மணி, பலவேசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Baja Advisory Meeting ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்