×

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சிக்கடைகளில் ஆய்வு

திருப்பூர்,பிப்.25:திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் நொய்யல் ரோடு, மற்றும் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி இறைச்சிகள் விற்பனை செய்யும் கடைகளில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமண அலுவலகர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஆடு, மாடுகளை பாதுகாப்பான முறையில் வதை செய்து, சுகாதாரமான முறையில் விற்பனை செய்யவும் அறிவுறுத்தினர்.

Tags : Food safety officials ,meat stalls ,
× RELATED சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி...