×

பந்தலூர் பகுதியில் கறிக்கோழி அதிகவிலைக்கு விற்பதாக புகார்

பந்தலூர், பிப்.25 : பந்தலூர், கொளப்பள்ளி பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிக்கடைகளில் கோழிக்கறி சந்தை விலையை விட கூடுதலாக  விற்பனை செய்யப்படுகிறது. பந்தலூர் மற்றும்  கொளப்பள்ளியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள உப்பட்டி, சேரம்பாடி, பிதர்காடு பகுதிகளில்  கோழி கறி கிலோ ரூ. 130க்கு விற்பணை செய்கின்றனர். ஆனால், பந்தலூர், கொளப்பள்ளியில் ரூ.170க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் அசைவ பிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்