×

கார்-ஜீப் மோதல்: வாலிபர் பலி

கோவை, பிப். 25:  சேலம் மேட்டூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் தினேஷ் (23). இவரது லாரி மதுக்கரை அருகே பழுதாகி நின்றது. லாரியை எடுப்பதற்கான தினேஷ், அவரது நண்பரான மேட்டூர் ஜீவா நகரை சேர்ந்த மணிகண்டன் (25) ஆகியோர் நேற்று முன்தினம் காரில் வந்தனர். காரை தினேஷ் ஓட்டினார். மதுக்கரை போடிபாளையம் பிரிவு பைபாஸ் ரோட்டில் வந்தபோது, அவ்வழியாக வந்த ஜீப்பும், காரும் ேமாதிக்கொண்டன. இதில் தினேஷ், மணிகண்டன் மற்றும் ஜீப் ஓட்டி வந்த திண்டுக்கல் வெள்ளோடு பகுதியை  சேர்ந்த ஆல்பர்ட் சகாயம் (58) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் சிங்காநல்லூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : collision ,Plaintiff ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...