×

ஆணையர் அறிவுறுத்தல் வயலூர் கிராமத்தில் நாளை நடக்க இருந்த மக்கள் தொடர்பு நிறைவு நாள் முகாம் ஒத்திவைப்பு

கரூர், பிப்.25: கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூரில் நாளைநடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர் கிராமம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நாளை (26ம் தேதி) காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் நடைபெற இருந்த மக்கள் தொடர்பு நிறைவுநாள் முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தொடர்பு திட்ட நிறைவுநாள் முகாம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Vayalar village ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...