×

சோழவந்தான் அருகே மேலக்காலில் கால்நடை மருந்தகம் திறப்பு

சோழவந்தான், பிப்.25: சோழவந்தான் அருகே மேலக்காலில் கிளை மருந்தகமாக செயல்பட்ட கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் திருவள்ளுவன், கூட்டுறவு இணைய மாநில தலைவர் செல்லப்பாண்டி, டாக்டர் ஆறுமுகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் விஜயபாஸ்கர் வரவேற்றார். சோழவந்தான் எம்.எல்.ஏ.மாணிக்கம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மருத்துவர்கள் பாலமுருகன், சுரேஷ், வாசுதேவன், ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி, துணைத் தலைவர் சித்தாண்டி, கால்நடை ஆய்வாளர்கள் ரேவதி, சுப்பிரமணியன், ஜெயராமச்சந்திரன், கனிமொழி மற்றும் அழகேசன் உள்ளிட்ட உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பேசிய பொதுமக்கள், மேலக்காலில் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யுமாறு எம்.எல்.ஏ மாணிக்கத்திடம் கோரிக்கை வைத்தனர்.

Tags : Veterinary Pharmacy Opening ,Melakkal ,Cholavanthan ,
× RELATED சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல...