×

திருப்பாலைக்குடி அருகே மணல் திருடிய 2 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.25:  திருப்பாலைக்குடியில் அனுமதியின்றி கண்மாய் ஒடை பகுதியில் மணல் திருடியவர்கள் மீது போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பாலைக்குடி கண்மாய் வரத்து கால் ஓடைப்பகுதியில் மர்ம நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக விஏஓ மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது கண்மாய் வரத்துக் கால்வாய் பகுதியில் டிராக்டரில் மணல் திருடுவது தெரிய வந்தது.

போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வருவதை பார்த்தவர்கள் வாகனத்தை விட்டு விட்டு ஓடி விட்டனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கொடுத்த புகாரின் ேபரில், பழங்கோட்டையை சேர்ந்த சக்தி முருகன் மகன் சக்தி முகுந்தன்(32), பிச்சை மகன் அபிமன்யூ (19) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, மணல் திருட்டிற்கு பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : persons ,Tirupalakudi ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...