காரைக்குடி, பிப்.25: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா படத்திற்கு, முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சோழன் பழனிச்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் கற்பகம் இளங்கோ, மெய்யப்பன், ஆவின் சேர்மன் அசோகன், மாவட்ட பேரவை இணை செயலாளர் சின்னத்துரை, பாம்கோ மாவட்ட இயக்குனர் இயல் தாகூர், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் தேவன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில் வடிவேலு, சண்முகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.