×

ஐடிஐ மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

சிவகங்கை, பிப்.25: அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அளிக்கப்பட உள்ளது.  சிவகங்கை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர்(பொ) முருகன் விடுத்துள்ள அறிக்கையில், ‘சிவகங்கையில் அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு குறு, நடுத்தர மற்றும் பெறு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு மதுரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சிவகங்கை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் வரும் பிப்.29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ITI ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...