×

காளையார்கோவிலில் ஊராட்சி உறுப்பினர்களுக்கு பாராட்டு கூட்டம்

காளையார்கோவில், பிப். 25: காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட பகுதி உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. நகர் வர்த்தக சங்க தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். ரத்தினம்,  லூயிஸ், பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வைத்தனர் மாநில துணைத்தலைவர் லட்சுமணன், மாவட்ட தலைவர் பாலகுருசாமி, மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ, மாவட்ட செயலாளர் வீரபத்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் அருள்ராஜ், இந்திய ஜனநாயக கட்சி குழந்தைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாவட்ட கவுன்சிலர் ஸ்டெல்லா, ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்தூரி, பாண்டியராஜன், மகேஸ்வரன், ஆரோக்கிய ஜெனிபர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோஸ்பின் மேரி, மங்கையர்க்கரசி, அமுதா, திருவருள்செல்வி, முத்துமாரி, மெய்ஞான மூர்த்தி, துணைத் தலைவர்கள் சிவசண்முகம், மகேந்திர பிரபு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான வர்த்தகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் ரவி நன்றி கூறினார். 

Tags : Appreciation meeting ,panchayat members ,Kaliyarikovil ,
× RELATED காளையார்கோவிலில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கிராம மக்களே அகற்றினர்