×

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பெரியகுளத்தில் முஸ்லிம்கள் 13வது நாளாக போராட்டம்

பெரியகுளம், பிப். 25: குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 13வது நாளாக பெரியகுளத்தில் இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், பெரியகுளத்தில் மதுரை சாலையில் உள்ள ரஹமத் மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக கடந்த 10 நாட்களாக 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 13வது நாளாக இரவு பகலாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தினை திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இதையொட்டி பெரியகுளத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Muslims ,revocation ,
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...