விருத்தாசலம், பிப். 25: விருத்தாசலம் பழமலைநாதர் உழவார தொண்டர் திருக்கூட்டம் மற்றும் எருமனூர் விஇடி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. உழவார திருக்கூட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மிக தொண்டர்கள் கலந்து கொண்டு கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் புல், பூண்டுகளை சுத்தம் செய்து தூய்மைப் படுத்தினர். அதனை தொடர்ந்து வருகின்ற மாசி மகத்தை ஒட்டி கோயிலிலுள்ள பூஜை சாமான்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.