×

இருதரப்பினர் மோதலால் பரபரப்பு

திட்டக்குடி, பிப். 25: ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி கிராமத்தில் அங்காளபரமேஸ்வரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை இக்கோயிலில், மாயானக்கொள்ளை திருவிழா நடந்தது. இதில், சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டனர். ஒரங்கூர் கிராம மக்களும் இதில், கலந்துகொண்டு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அப்போது, மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், பொங்கல் வைத்து வழிபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, டிஎஸ்பி வெங்கடேசன், இருதரப்பையும் சேர்ந்த தலா 8 பேரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் ஆவேசமடைந்த ஒரு பிரிவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : conflict ,
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...