×

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் எம்.ரவி தலைைம தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி, மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் ராம்தாஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சந்திரசேகர், எஸ்.செல்வி உட்பட பலர் பேசினர்.

இதில், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தாமல், 21 வார்டுகளில் மட்டும் அமல்படுத்திவிட்டு, மீதமுள்ள 18 வார்டுகளில் அமல்படுத்தாத நிலையில் அனைத்து வார்டு வரிவசூல் செய்வதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். அனைத்து வார்டுகளிலும் சின்டெக்ஸ் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை நகரம் முழுவதும் கொசுமருந்து அடிக்க வேண்டும். அனைத்து தருக்களில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில் பஞ்சமூர்த்தி நன்றி கூறினார்.


Tags : Communist ,demonstration ,Thiruvannamalai Municipal Office ,
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...