×

கோயிலுக்கு ஒதுக்கிய நிலம் தனியார் ஆக்கிரமிப்பு

காஞ்சிபுரம், பிப்.25: காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் கோயிலுக்கு ஒதுக்கிய பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறியிருப்பதாவது.
காஞ்சிபுரம் அடுத்த ஐயம்பேட்டையில் படவேட்டம்மன் கோயிலுக்கு பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட பொது இடம் என்பதால் ரேஷன்கடை மற்றும் அங்கன்வாடி மையம் வந்த போதும் மாற்று இடம் தேர்வு  செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்தார். அந்த ஆக்கிரமிப்பு பொதுமக்களால் அகற்றப்பட்டது. இதனால் அவர், ஊர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசில் புகார்  அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தை கோயில் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...