×

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தமிழ் தாத்தா உ.வே.சா. 165வது பிறந்தநாள் விழா

ராஜபாளையம், பிப். 21:  ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. 165வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி பொறுப்பு முதல்வரும் சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலாவதி வாழ்த்துரை வழங்கினார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கண்ணதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழ் தந்த தாத்தா என்னும் தலைப்பில் பேசினர். அப்போது உ.வே.சா.வின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அவர் ஓலைச் சுவடிகளைத் தேடித் திரிந்த விதத்தை எடுத்துரைத்தார். மேலும் பதிப்பு குறித்தும் ஓலைச்சுவடிகள் குறித்தும் மாணவர்களுக்குக் காணொளிக் காட்சி வழியாக விளக்கிப் பேசினார். சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மைதிலிராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : grandfather ,Tamil ,birthday party ,Rajapalayam ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...