போடி, பிப். 21: கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்தவர் மோகன் (46). இவர், போடி மெட்டு அருகே உள்ள மணப்பட்டிக்கு வந்து பயணிகள் நிழற்குடை பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின்பேரில், குரங்கணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து. சாந்தாம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், மோகன் குடும்ப பிரச்னையால் அடிமாலிலிருந்து வந்து மணப்பட்டியில் 4 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.