×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 7 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில்  தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி, கொலை மற்றும் அடிதடி என 10 வழக்குகளில் தொடர்புடைய திருவல்லிக்கேணி காசிம் அலி முதல் தெருவை சேர்ந்த ஜலீல்பாட்ஷா (எ) ஜலீல் (26), ராமாபுரம் கண்ணையா தெருவை சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (26), திருமுல்லைவாயல் மூர்த்தி நகர் முதல் தெருவை சேர்ந்த ராகுல் (25), திருட்டு மற்றும் வழிப்பறி என 8 வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பாலாஜி (31), கஞ்சா வழக்கில் தொடர்புடைய எர்ணாவூர் நேதாஜி நகரை சேர்ந்த ராஜ்குமார் (எ) அறுப்பு ராஜ் (26), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மேற்கு தாம்பரம்  வைகைநகர் குளக்கரை தெருவை சேர்ந்த கார்த்திக் (எ) தாவீது (24), கொலை வழக்கில் தொடர்புடைய மறைமலைநகரை ேசர்ந்த மதன் (44) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : crimes ,series ,
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...