×

போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு

தர்மபுரி, பிப்.21: தர்மபுரி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் சபை சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 650க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து, தர்மபுரி விருபாச்சிப்புரம் விஏஓ சங்கர், தர்மபுரி டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், மத்திய-மாநில அரசுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் போராட்டம் நடத்தியதாக, இஸ்லாமிய அமைப்புகளின் 22 முக்கிய நிர்வாகிகள் உட்பட 450 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...