×

கர்ப்பிணி பெண்கள் வார்டு கதவை பூட்டியதால் அவதி

கரூர், பிப். 21: கர்ப்பிணி பெண்கள் வார்டில் முன்கதவை பூட்டியதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்படும் வார்டில் முன்பக்க கதவு வழியாக நோயாளிகளை அனுமதித்து வந்தனர். இந்நிலையில் இந்த முன்பக்க கதவை பூட்டி வைத்துள்ளனர். இதனால் பின்புறமாக சுற்றி வர சொல்கின்றனர். இதனால் நிறைமாத கர்ப்பிணிகளை அழைத்து வருபவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு பின்புறமாக சுற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் அவதிப்படுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் உடல்நிலையை கருத்தில்கொண்டு வழக்கம்போல முன்பக்க கதவை திறந்து விட்டு அந்த வழியாகவே அனுமதிக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். நிர்வாகம் பிரசவத்திற்கு செல்லும் நிறைமாத கர்ப்பிணிகளின் நிலையை உயர்ந்து செயல்படவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...