×

தூத்துக்குடியில் 8 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்

தூத்துக்குடி, பிப்.21:  தூத்துக்குடி மாநகரில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென சட்டமன்றத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.தமிழக சட்டமன்றத்தில் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதாஜீவன் பேசும்போது,கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக அந்த பணிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் மாநகர மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே அந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, உறுப்பினர் கீதாஜீவன் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...