×

மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை

ஈரோடு, பிப்.21: மகா சிவராத்திரியையொட்டி ஈரோடு மாவட்ட மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு இன்று (21ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் மார்க்கெட்டுகளான ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டிகள் இயங்கி வருகிறது. இந்த நான்கு மார்க்கெட்டுகளிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த மஞ்சள் மற்றும் குடோன்களில் இருப்பு வைத்துள்ள மஞ்சள்களை ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த மஞ்சள் மார்க்கெட்டுகளில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெறும். இந்நிலையில் இன்று (21ம் தேதி) மகா சிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வழக்கம்போல் திங்கள்கிழமை அன்று ஏலம் நடைபெறும் என மஞ்சள் மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Holidays ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...