×

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்

பெரம்பலூர், பிப். 20: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தமிழக அரசால் சிறப்பு திட்ட முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல், ஆதார் அட்டைகள் பெற பதிவு செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், சிறு மற்றும் குறுவிவசாயிகளுக்கான சான்றிதழ், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் உதவிகள் பெற சமர்ப்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர் சேர்த்தல், துயர் துடை ப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நடத்தப்படும் முகாமில் பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி இன்று (21ம் தேதி) பெரம்பலூர் தாலுகாவில் அம்மாப்பாளையம், வேப்பந்தட்டை தாலுகாவில் பசும்பலூர் (வடக்கு), குன்னம் தாலுகாவில் கீழப்புலியூர் (தெற்கு) மற்றும் ஆலத்தூர் தாலுகாவில் தெரணி ஆகிய கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : project camp ,locations ,district ,Perambalur ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்