×

தஞ்சையில் லயன்ஸ் சங்கம் மருது மண்டல சந்திப்பு

தஞ்சாவூர், பிப். 20: தஞ்சை பிஎல்ஏ சிதம்பரம் மஹாலில் பன்னாட்டு சங்கங்கள் மாவட்டம் 324 ஏ2 மண்டலம் 4-ன் மருது மண்டல சந்திப்பு நடந்தது. மண்டல தலைவர் ஏஎஸ் பெரியமருது தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு மண்டல சந்திப்பை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக புலவர் ராமலிங்கம், முன்னாள் ஆளுநர் ஷேக்தாவூத், சேதுகுமார், சோமா ராஜரத்தினம், குணசீலன், ராஜேந்திரன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். செயலாண்மைக்குழு தலைவர் வசந்தகுமார் வரவேற்றார். தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்க டாக்டர் ஸ்டாலின், மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபுவை அறிமுகப்படுத்தினார்.

விழாவில் முன்னாள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கர்னல் பாஸ்கர், ஜெயக்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். முன்னாள் ஆளுநர்களை மண்டல தலைவர் பெரியமருது சால்வை அணிவித்து கவுரவித்தார். முன்னாள் மாவட்ட ஆளுனர் ஜார்ஜ் ராவுக்கு புகைப்பட கண்காட்சி விருது வழங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட ஆளுநர் மனோகரன் மண்டல சந்திப்பில் மதிப்பீட்டு உரையாற்றினார். செயலாண்மைக் குழு செயலாளர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

Tags : meeting ,Lions Association ,Thane ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...