×

முதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் காவலர் பணி இடை நீக்கம்

சென்னை, பிப். 20: முதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் சத்தியவாணி (27). இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரின் கூறியதாவது. சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் ராஜா (27). இவர், தற்போது தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜா. ராஜபாளையத்தில் காவலராக பணிபுரிந்தபோது சத்தியவாணியும் காதலித்தனர்.இந்நிலையில் காவலர் ராஜா, 27:10:2017ல் வடபழனி முருகன் கோவியிலில் சத்தியவாணியை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உடல் நிலை சரி இல்லாமல் இறந்துவிட்டது. அதன் பின்பு தன்னுடைய மனைவியுடன் சரிவர பேசாவில்லை. இதனால் கணவர் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் செல்போனை எடுத்து சோதனை செய்யும் போது ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொண்ட படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது முன்னுக்கு முரணான பதில் அளித்ததாக தெரிகிறது. தீடீர் என்று எனது கணவர் ராஜபாளையத்தில் 45 நாள் பயிற்சி எடுப்பதாக கூறிச்சென்றவர் இதுவரை என்னிடம் பேசவில்லை. அவர் இராண்டவது மனைவியுடன் வாழ்கிறார். எனவே என்னுடை கணவரை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இதுகுறித்து காவலர் ராஜா, மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் புகார் செய்தார், போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதால் சத்தியவாணி நேற்று முன்தினம் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து ராஜா பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : marriage guard ,
× RELATED மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் காவலர் பணி இடை நீக்கம்