×

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தேனி. பிப்.20: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் வக்கீல்கள் கோர்ட் பணிகளை புறக்கணித்தனர். சென்னை உயர் நீதி மன்ற வளாகத்திற்குள் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போலீசார் புகுந்து வக்கீல்கள் மீது தடியடி நடத்திய நாளை வக்கீல்கள் கருப்பு நாளாக அறிவித்துள்ளனர். நீதி மன்ற கருப்பு நாளாக கடைபிடித்ததையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில், வக்கீல்கள் பணிக்கு செல்லாமல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.

Tags : Attorneys ,
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா