×

பெரியகுளம் அருகே தொழிலாளர்களுக்கு மிரட்டல்: நான்கு பேர் மீது வழக்குப்பதிவு

பெரியகுளம், பிப்.20: பெரியகுளம் அருகே தொழிலாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன்(59). இவருக்குச் சொந்தமான பூர்வீக சொத்தை பெரியகுளம் வடக்கு பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மனோகரன் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க உள்ளதாக பெரியகுளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வாசுதேவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன், அவரது மகன் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஹக்கீம், அபு ஆகியோர் வாசுதேவன் வீட்டுடன் கூடிய வெள்ளைப்பூண்டு குடோனில் உள்ளே சென்று, அதனை வாடகைக்கு எடுத்த ராஜேந்திரன் மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த முத்தம்மாள், பவுன்தாய் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளார்கள். இது குறித்து வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags : persons ,Periyakulam ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...